பல்கலைக்கழக மானிய குழு நடப்பு கல்வி ஆண்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் எம்.பில் படிப்பில் மாணவர்களை சேர்க்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்கலைக்கழகம் மானிய குழு 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி எம்.பில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் இல்லை. அதனால் நடப்பு கல்வி ஆண்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களை எம்.பில் படிப்பில் சேர்க்கக் கூடாது என அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் சில கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எம்.பில் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதாக வந்த புகாரை அடுத்து இந்த சுற்றறிக்கையை பல்கலைக்கழக மானிய குழு அனுப்பியுள்ளது