சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கள் திறமையால் அனைவரையும் கவர்ந்துள்ளனர். ஜப்பான் அணியை வீழ்த்திய சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்கு வெற்றிக் குரல் கொடுத்துள்ளனர்.
சீனாவில் நடைபெற்று வரும் மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஜப்பான் ஜோடி ஹிரோகி நிஷி-காகேரு குமாகாயை எதிர்கொண்ட போட்டியில் முதல் செட்டை 10-21 என இழந்தாலும், அடுத்த இரண்டு செட்களில் 22-20, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்தை எட்டினர். மற்றொரு ஆட்டத்தில் இந்திய ஜோடி சாய் பிரதீக்-பிருதிவி கிருஷ்ணமூர்த்தி ராய், மலேசிய அணியிடம் தோல்வி கண்டது.