பிரான்சில் தீவிர வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போட்டி தேர்தலை தாண்டி உள்நாட்டு போராக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.
இந்த இரு பிரிவுகளுக்கு இடையே கருத்து மோதல் வளர்ந்து கொண்டே வருவதால் இந்த வெறுப்பு உள்நாட்டு போராக மாறக்கூடும் என்று அவர் எச்சரிக்கை செய்துள்ளார். ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பிரான்சில் இடதுசாரிகள் வென்றது. இது வலதுசாரிகளுக்கு பலத்த அடியாக அமைந்தது. இதையடுத்து மேக்ரான் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு அவசர தேர்தலை அறிவித்தார். வரும் ஜூன் 30-ல் தொடங்கி ஜூலை 7 வரை பிரான்சில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு வலதுசாரியான நேஷனல் ரேலி கட்சிக்கும் இடதுசாரியான நியூ பாப்புலர் முன்னணி கூட்டணிக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பிரான்சில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகிறது. முன்னதாக வலதுசாரிகளுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று ஐரோப்பிய தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது. ஆனால் வலதுசாரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் குதித்ததையடுத்து மேக்ரான் இவ்வாறு கூறியுள்ளார்.