மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் மரியா சக்காரி மற்றும் அரினா சபலென்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகின்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, போலந்து வீராங்கனை மேக்டா லின்னெட் எதிராக விளையாடினார்.
இந்த போட்டியில், மரியா சக்காரி 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அன்னா பிளின்கோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.