மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் அனைத்தும் வரும் 2026ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்ற அவர், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசோடு இணைந்து தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையின் திட்டங்களை சிறப்பாகி செயல்படுத்தி வருவதாக கூறினார் . மக்கள் நலனில் அக்கறை கொண்டு மத்திய அரசும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா பேரிடரால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தாமதமாகியது. தற்போது திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே 2026ம் ஆண்டு இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்றும் அமைச்சர் பாரதி பிரவீன் உறுதி அளித்தார்.