மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபோகம் நாளை நடைபெறுகிறது.
மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபோகம் நாளை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு தங்கபல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் மொத்தம் 483 மண்டக படிகளில் எழுந்தருள உள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று புதூர் மூன்று மாவடியில் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை காலை 5.10 மணியிலிருந்து 6.10 மணி வரை நடைபெறுகிறது.