டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக மேலூர் பகுதி மக்கள் தொடர்ந்த போராட்டங்கள் நிறைவுக்கு வந்தது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான மத்திய அரசின் ஏல அறிவிப்புக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள், இதனால் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் என கூறி தொடர்ந்த போராட்டங்களை நடத்தினார்கள்.விவசாயிகள் மற்றும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த நிலையில், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. விவசாய சங்க பிரமுகர்கள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் தலைமையில் டெல்லிக்கு செல்லும் முகமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.