இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் டொபேலோ என்கிற பகுதியில் இருந்து 94 கிலோ மீட்டர் தொலைவில் 116 கிலோ மீட்டர் ஆழத்தில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 6.2 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இது குறித்து இந்தோனேசிய புவியியல் நிறுவனம் கூறுகையில் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எதுவும் ஏற்படாது. எனினும் பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றது. இதுவரை உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல் எதுவும் வரவில்லை.