தேசியவாத காங்கிரஸ் பிளவு - மும்பையில் புதிய அலுவலகம் தொடங்கும் அஜித் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார். அவரது அண்ணன் மகனான அஜித் பவார் நேற்று முன்தினம் பாஜக கூட்டணியில் இணைந்தார். தொடர்ந்து, மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவி ஏற்று கொண்டார். இதன் காரணமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சில எம்எல்ஏக்கள் அவர் பக்கம் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட 40 எம்எல்ஏக்களின் ஆதரவு அஜித் பவாருக்கு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ளது. இந்நிலையில், மும்பையில் உள்ள மந்திராலயாவுக்கு எதிரே, புதிய […]

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார். அவரது அண்ணன் மகனான அஜித் பவார் நேற்று முன்தினம் பாஜக கூட்டணியில் இணைந்தார். தொடர்ந்து, மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவி ஏற்று கொண்டார். இதன் காரணமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சில எம்எல்ஏக்கள் அவர் பக்கம் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட 40 எம்எல்ஏக்களின் ஆதரவு அஜித் பவாருக்கு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ளது. இந்நிலையில், மும்பையில் உள்ள மந்திராலயாவுக்கு எதிரே, புதிய அலுவலகம் ஒன்றை அஜித் பவார் இன்று தொடங்குகிறார்.

இந்நிலையில், பாஜக கூட்டணியில் இணைந்து அமைச்சர்களாக பதவியேற்ற 8 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக சரத் பவார் தெரிவித்துள்ளார். மேலும், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதற்காக, மகாராஷ்டிரா மாநில சபாநாயகரிடம் மனு அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளையில், தாங்கள் தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று அஜித் பவார் தரப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu