சுஜாதா சவுனிக் மகாராஷ்டிராவின் முதல் பெண் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
மகாராஷ்டிராவின் 64 ஆண்டு கால வரலாற்றில் முதல் பெண் தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா சவுனிக் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக தலைமைச் செயலாளராக இருந்த நிதின் கரீர் ஓய்வு பெற்றதற்கு பின்பு 1987 வது பேட்சை சேர்ந்த சவுனிக் நேற்று பதவி ஏற்றுள்ளார். இதனை தொடர்ந்து இவர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை பதவியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது