பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, தனது வங்கதேச செயல்பாடுகளை நிறுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில், மஹிந்திரா பங்களாதேஷ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில், சொந்த நிறுவனத்தை இயக்கி வந்த மஹிந்திரா நிறுவனம், இன்று தனது பங்குதாரர்களுடன் இறுதி சந்திப்பை நிகழ்த்தியது. அப்போது, நிறுவனத்தை மூடுவதற்கான முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், இன்று முதல் நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வருடம் மார்ச் 31ம் தேதி முதல், இந்த நிறுவனத்திற்கு வருமானம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடந்த பங்குதாரர் சந்திப்பில், நிறுவனத்தின் அனைத்து வித செயல்பாடுகளும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, புதிய வர்த்தக செயல்பாடுகள் எதையும் நிறுவனம் மேற்கொள்ளவில்லை.