மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா விமான விபத்தில் பலியானார்.
மலாவி கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும். அதன் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா தலைநகர் லாங்குவேயில் இருந்து முசுசு நகருக்கு ராணுவ விமானம் மூலம் பயணம் செய்தார். அவருடன் மூன்று ராணுவ அதிகாரிகள் உட்பட மொத்தம் 10 பேர் பயணித்தனர். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வானிலை சரி இல்லாததால் விமானத்தை தரை இறக்குமாறு தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு வந்தது. ஆனால் சில நிமிடங்களில் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் துணை அதிபர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் உள்ள அனைவரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அந்நாட்டு அதிபர் லசாரஸ் சக்வேரா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் விமானத்தின் உடைந்த பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.