மாலத்தீவில் யு.பி.ஐ., பண பரிவர்த்தனை அறிமுகம்

October 23, 2024

மாலத்தீவில் யு.பி.ஐ. பண பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள டிஜிட்டல் பரிவர்த்தனை சேவையை, மத்திய அரசு வெளிநாடுகளில் அறிமுகம் செய்ய ஆர்வம் காட்டியுள்ளது. அதற்கிணங்க, இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே கடந்த ஆகஸ்டில் யு.பி.ஐ. தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் மூலம், தற்போது மாலத்தீவில் யு.பி.ஐ. அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாலத்தீவு அரசு வெளியிட்ட அறிக்கையில், "யு.பி.ஐ. மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கும். இது விரைவான பணப் பரிவர்த்தனை மற்றும் வலுவான […]

மாலத்தீவில் யு.பி.ஐ. பண பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள டிஜிட்டல் பரிவர்த்தனை சேவையை, மத்திய அரசு வெளிநாடுகளில் அறிமுகம் செய்ய ஆர்வம் காட்டியுள்ளது. அதற்கிணங்க, இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே கடந்த ஆகஸ்டில் யு.பி.ஐ. தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் மூலம், தற்போது மாலத்தீவில் யு.பி.ஐ. அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாலத்தீவு அரசு வெளியிட்ட அறிக்கையில், "யு.பி.ஐ. மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கும். இது விரைவான பணப் பரிவர்த்தனை மற்றும் வலுவான டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கும்" என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், மற்றும் பூடான் போன்ற நாடுகளில் யு.பி.ஐ. வசதி இருந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu