மாலத்தீவின் அதிபர் முகமது முய்சு, வரும் 6-ந்தேதி இந்தியாவுக்கு வருகிறார்.
முகமது முய்சு அதிபராக பதவியேற்ற பிறகு, இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் அரசு முறை பயணம் இது. முன்பு, ஜூன் மாதம் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். சமீபத்தில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாலத்தீவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்திய பெருங்கடலில் மாலத்தீவு முக்கிய கடல்சார் கூட்டணி நாடாக உள்ளது. இதனால் இந்த வருகை இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முகமது முய்சு, இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து, இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.














