இந்தியாவின் ரூபே சேவை மாலத்தீவில் விரைவில் அறிமுகம் ஆக உள்ளதாக அந்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் முகமது சையத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், மாலத்தீவில் விரைவில் இந்தியாவின் ரூபே சேவை அறிமுகம் ஆக உள்ளது. இதையடுத்து மாலத்தீவு செலாவணிக்கு மேலும் வலு சேர்ப்பது போன்றதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். இந்த சேவை எந்த தேதியில் இருந்து தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. முன்னதாக, முஹம்மது சையத் மாலத்தீவு எல்லைக்குள் ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்கு ரூபே அட்டை பயன்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.