டெல்லி ஜி 20 உச்சி மாநாட்டை ஒட்டி இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார்.
டெல்லியில் 9,10 ஆம் தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள வரும் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அழைப்பு விடுத்து வருகிறது. இதனை ஏற்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதில் மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோருக்கு அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் தேவகவுடா உடல் நலத்தின் காரணமாக பங்கேற்க இயலாது என்று காரணம் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சியின் தலைவரும் ஆன மல்லிகார்ஜூனே கார்கேவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் இவர் மிகப்பெரிய எதிர்க்கட்சித் தலைவர். கேபினட் மந்திரிக்கு சமமானவர் எனவும் கூறியுள்ளனர். விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அனைத்து கேபினட் மந்திரிகள் மாநில முதல்வர்கள் ஆகியோர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர் இந்திய அரசின் அனைத்து செயலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.