காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க அனுமதிக்க மாட்டேன் - மல்லிகார்ஜூன கார்கே உறுதி

October 27, 2022

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க அனுமதிக்க மாட்டேன் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, சசி தரூர் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். பின்னர் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, சாதாரண தொண்டரை கட்சி தலைவராக்கிய தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். காங்கிரஸ் உருவாக்கிய ஜனநாயகத்தை மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. ராகுலின் […]

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க அனுமதிக்க மாட்டேன் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, சசி தரூர் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். பின்னர் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, சாதாரண தொண்டரை கட்சி தலைவராக்கிய தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். காங்கிரஸ் உருவாக்கிய ஜனநாயகத்தை மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையால் நாட்டில் புது உற்சாகம் எழுந்துள்ளது என்றார் .

இந்த புதிய இந்தியாவில், மக்களின் பசி, கல்விக்கான செலவு, சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்துள்ளது. அதோடு தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் நசுக்கப்படுகின்றனர் என்றார்.

மேலும், அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை அகற்ற முயற்சி நடக்கிறது. இது போன்ற புதிய இந்தியாவை உருவாக்க, காங்கிரஸ் இல்லாத நாட்டை விரும்புகின்றனர். ஆனால் அதனை நடக்க அனுமதிக்க மாட்டேன் என்று அவர் பேசினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu