ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில், குடிநீர் குழாய் இணைப்புகள் தொடர்பான மோசடிகள் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இதனடிப்படையில் ராஞ்சியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி ஐ. ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகளின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் முறைகேடுகளை கண்டறிய அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.