மனன் குமார் மிஷ்ரா மீண்டும் இந்திய பார் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மனன் குமார் மிஷ்ரா இந்திய பார் கவுன்சில் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவரின் 7-வது முறையாக தேர்வு ஆகும். எதிர்பாராத வேட்பாளர்கள் இல்லாத காரணத்தினால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.இந்திய பார் கவுன்சில் தலைமை செயலாளர் ஸ்ரீமன்டோ சென் வெளியிட்ட அறிக்கையில், அவர் தலைமையில் சீழ் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைத் தலைவர் பதவிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து எஸ். பிரபாகரன், டெல்லியை சேர்ந்த வேத் பிரகாஷ் சர்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தல் நாளை நடைபெறும். மேலும், மே 17-ஆம் தேதி டெல்லியில் வழக்கறிஞர் பிரதிநிதிகள் மற்றும் மாநில பார் கவுன்சில் உறுப்பினர்களின் தேசிய கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டம் மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.