பஞ்சாபில் அமிர்தசரண்ய உத்தரவை பிறப்பித்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்.
பஞ்சாப் மாநிலத்தில், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. தேர்வின் வரைவுத் திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டமை சர்ச்சையை கிளப்பிய நிலையில், பஞ்சாப் அரசு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன், 2025-26 கல்வியாண்டு முதல், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.