மணிப்பூர் முதல்வர் ராஜினாமா செய்துள்ளார்.
மணிப்பூரின் பாஜக முதல்வர் பைரன் சிங் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை இம்பாலில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் வழங்கினார். 2023 ஆம் ஆண்டில், இரு குழுக்களிடையே ஏற்பட்ட கலவரம், 200 க்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டனர், வீடுகள் தீக்கிரையாகின. இந்த கலவரங்களுக்கு பைரன் சிங் தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதில், சுதந்திர விசாரணையை கோரிய வழக்கில், நீதிபதிகள் மத்திய தடயவியல் ஆய்வகத்துக்கு ஆடியோ டேப்புகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.