மணிப்பூர் விவகாரம் - ஜந்தர் மந்தரில் மகளிர் காங்கிரஸ் அணியினர் போராட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மே 4ம் தேதி பழங்குடியின பெண்கள் இருவர் நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட காணொளி வெளிவந்துள்ளது. இது உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த காணொளி தற்போது வெளிவந்துள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மகளிர் காங்கிரஸ் அணியினர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் முதல்வர் பிரேம் சிங் பதவி விலக […]

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மே 4ம் தேதி பழங்குடியின பெண்கள் இருவர் நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட காணொளி வெளிவந்துள்ளது. இது உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த காணொளி தற்போது வெளிவந்துள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மகளிர் காங்கிரஸ் அணியினர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் முதல்வர் பிரேம் சிங் பதவி விலக வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக மௌனம் கலக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். அதே வேளையில், ‘இந்த சம்பவம் மனித குலத்துக்கே நிகழ்ந்த பேரவமானம்’ என பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்திற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிடும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், குற்றத்தில் ஈடுபட்டவர்களிடம் தங்களை காவல்துறை அதிகாரிகளே ஒப்படைத்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu