இலங்கை கடற்படை கைப்பற்றிய 14 தமிழ்நாடு மீனவர்கள்: மன்னார் நீதிமன்றத்தில் விடுவிப்பு
ராமேசுவரத்தில் இருந்து கடந்த டிசம்பர் 5-ந்தேதி 338 விசைப் படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியான நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிக்க வந்ததாக கூறி, ராமேசுவரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை சிரைப்பிடித்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராமேசுவரம் தங்கச்சி மடம் பகுதியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் 14 மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 14 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மீனவரும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.