இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில், ஒருவேளை பாஜக 250 சீட்டுகளுக்கு குறைவாக வென்றால் இந்திய பங்குச் சந்தையில் கிட்டத்தட்ட 20% வரை வீழ்ச்சி பதிவாகலாம் என பிரபல பொருளாதார நிபுணர் ருசிர் சர்மா கூறியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்திய பங்குச் சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, உள்நாட்டு முதலீடுகள் உயர்ந்துள்ளது. அந்நிய முதலீடுகளில் மிகப்பெரிய வளர்ச்சி இல்லை. இந்த சூழலில், தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தையில் வெகுவாக எதிரொலிக்கும். அந்த வகையில், பாஜக தோற்றால் 15 முதல் 20% வீழ்ச்சி பதிவாகலாம் என ருசிர் சர்மா கூறியுள்ளார். அதே சமயத்தில், பாஜக வென்றால் பங்குச் சந்தையில் மிகப்பெரிய ஏற்றம் பதிவாகும் என கூறப்படுகிறது.