செவ்வாய் கிரகம் வாழிடமாக இருந்ததற்கான முக்கிய ஆதாரம் - விஞ்ஞானிகள் தகவல்

செவ்வாய் கிரகத்தில் உள்ள சுற்றுப்புற சூழல் மற்றும் நிலத்தின் அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள், பன்னெடும் காலங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகம் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற தகுதியுடன் இருந்திருக்கும் என கூறியுள்ளனர். செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியில் களிமண் வெடிப்புகள் காணப்படுகின்றன. நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களை வைத்து ஆராய்ந்ததில், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்கும் என விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். மேலும், இந்த தண்ணீர் ஆவியாகி இருக்கும் என கூறியுள்ளனர். இந்த நடைமுறை நெடுங்காலத்திற்கு மீண்டும் […]

செவ்வாய் கிரகத்தில் உள்ள சுற்றுப்புற சூழல் மற்றும் நிலத்தின் அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள், பன்னெடும் காலங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகம் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற தகுதியுடன் இருந்திருக்கும் என கூறியுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியில் களிமண் வெடிப்புகள் காணப்படுகின்றன. நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களை வைத்து ஆராய்ந்ததில், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்கும் என விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். மேலும், இந்த தண்ணீர் ஆவியாகி இருக்கும் என கூறியுள்ளனர். இந்த நடைமுறை நெடுங்காலத்திற்கு மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிகழ்ந்துள்ள காரணத்தினாலேயே இத்தகைய வெடிப்புகள் நிலத்தில் காணப்படுவதாக கூறியுள்ளனர். அதன்படி, சுழற்சி முறையில் வறட்சியான மற்றும் ஈரமான சூழல் செவ்வாய் கிரகத்தில் நிகழ்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu