வரும் மார்ச் 28 ஆம் தேதி, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மற்றும் யுரேனஸ் ஆகிய 5 கிரகங்களும் தென்பட உள்ளன. நேர்கோட்டில் அல்லாமல் வளைகோடு வடிவத்தில் இவை இரவு நேரத்தில் காட்சி அளிக்க உள்ளன. இவற்றுடன் இணைந்து நிலவும் அருகில் காட்சியளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அரிய வானியல் நிகழ்வை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
“இந்த 5 கிரகங்களிலும் வெள்ளி மிகவும் பிரகாசமானதாக இருக்கும். இது வியாழன் மற்றும் புதன் கிரகங்களுக்கு மேலே, இடது புறமாக இருக்கும். மேலும், புதன் கிரகத்தை விட வியாழன் பிரகாசமானதாக தெரியும். யுரேனஸ் கிரகம் வெள்ளிக்கு அருகில் இருக்கும். அதே வேளையில், செவ்வாய் கிரகமும் பிரகாசமானதாக தெரிவதால், யுரேனஸ் கிரகம் மறைக்கப்பட்டுவிடும். அதனை வெறும் கண்களால் காண்பது கடினம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.