மாருதி சுசுகி நிறுவனம் தனது முதலாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் 2485.1 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 145% உயர்வாகும். விற்பனையில் கடும் உயர்வு, வாகனங்களின் விலை குறைப்பு ஆகியவற்றால் மாருதி சுசுகி மிகப்பெரிய லாபத்தை பதிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நிறுவனத்தின் தனிப்பட்ட வருவாய் 22% உயர்ந்து 32326.9 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 498030 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 6.4% உயர்வாகும். குறிப்பாக, உள்நாட்டு வாகன விற்பனையில் 9.1% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.