மூன்றாண்டுகளுக்கு பின்னர், இந்தியாவின் வாகன கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மாருதி நிறுவனம், எஸ்யூவி ரக மின்சார வாகனத்தை வெளியிட்டுள்ளது.
மாருதியின் Concept eVX வாகனம், நடுத்தர அளவிலான வாகனமாகும். இது 60 KWh பேட்டரியுடன் வழங்கப்படுகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால், 550 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாகனம், 2025 ஆம் ஆண்டு சந்தைக்கு அறிமுகம் ஆகும் என சுசுகி நிறுவனத்தின் தலைவர் துஷிஹீரோ சுசுகி தெரிவித்தார். மேலும், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை குறைத்து, புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கில் இந்த வாகனம் உருவாக்கப்படுவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில், 10000 கோடி ரூபாய் மதிப்பில், மின்சார வாகனங்கள் மற்றும் அதன் பேட்டரிகள் உற்பத்திக்காக முதலீடு செய்யப்படும் என்று கூறினார்.