ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான காட்டுத்தீ இன்னும் சில வாரங்கள் தொடரும் என கூறப்பட்டுள்ளது.
விக்டோரியாவின் கிராம்பியான்ஸ் தேசிய பூங்காவில் 16 டிசம்பருக்குள் மின்னல் தாக்கியதில் தீ ஏற்பட்டது. மேலும் காற்றும் வெப்பமும் தீ பரவலை மிகையாக்கியது. கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் தீ மூன்று மடங்காக பரவியது. 300 தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானத்தினால் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அந்தக் காட்டுத்தீ மேலும் பரவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 6 நகரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது 34,000 ஹெக்டேர் நிலம் எரிந்துள்ளது.