தென்கொரிய நகரத்தில் பயங்கர தீ விபத்து - வீடுகள் சேதம்

April 11, 2023

தென்கொரியாவில் உள்ள கங்நியோங் நகரில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ கடுமையான காற்று காரணமாக வேகமாக பரவத் தொடங்கியது. இதனால், 44 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக, இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. கட்டுக்கடங்காமல் எரியும் இந்த தீயை அணைப்பதற்கு 700 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கிட்டத்தட்ட 300 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தென்கொரியா நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு […]

தென்கொரியாவில் உள்ள கங்நியோங் நகரில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ கடுமையான காற்று காரணமாக வேகமாக பரவத் தொடங்கியது. இதனால், 44 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக, இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. கட்டுக்கடங்காமல் எரியும் இந்த தீயை அணைப்பதற்கு 700 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கிட்டத்தட்ட 300 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தென்கொரியா நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இது குறித்து பேசுகையில், “300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் தீப்பிடித்த வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடுமையான காற்று வீசி வருவதால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தீயை முழுமையாக கட்டுப்படுத்த எவ்வளவு நேரம் ஆகும் என்பது குறித்து உறுதியாக கூற இயலவில்லை” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu