உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 39 வது லீக்காட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்றது.
ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கி 8 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி திணறியது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார். இறுதியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.