மே 12-ந்தேதி நடைபெற இருந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்- தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

April 25, 2023

மே 12-ந்தேதி நடைபெற இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு தி.மு.க. தொழிற்சங்கம் மற்றும் கூட்டணி தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு தொழிற்சங்கங்கள் மே 12-ந் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தன. இந்நிலையில் அரசு சார்பில் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து தமிழ்நாடு திருத்த சட்ட மசோதா சட்டபேரவை சட்ட மசோதா எண். […]

மே 12-ந்தேதி நடைபெற இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு தி.மு.க. தொழிற்சங்கம் மற்றும் கூட்டணி தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு தொழிற்சங்கங்கள் மே 12-ந் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தன. இந்நிலையில் அரசு சார்பில் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து தமிழ்நாடு திருத்த சட்ட மசோதா சட்டபேரவை சட்ட மசோதா எண். 8/2023 என்ற சட்ட முன் வடிவின் மீதான மேல் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் விடுத்துள்ள அறிக்கையில், மே 12-ந் தேதி மசோதாவை கண்டித்து போராட்டம் அறிவித்திருந்தோம். இந்நிலையில் மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே வேலை நிறுத்தப் போராட்ட முடிவை கை விடுகிறோம் என கூறி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu