மெக்சிகோவில் நகர மேயர் பெண் முதலையை திருமணம் செய்த வினோத சடங்கு நடந்தது.
தெற்கு மெக்சிகோவில் சான் பெட்ரோ ஹுவாமெலுலா நகரின் மேயராக இருப்பவர் விக்டர் ஹியூகோ சொசா. இவர், ஆலிசியா ஆட்ரியானா என்ற பெயர் கொண்ட பெண் முதலையை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து உள்ளார். மணமகளான முதலையை கையில் வைத்து கொண்டு மேயர் சொசா, உற்சாக நடனமும் ஆடி அதன் மூக்கு பகுதியில் முத்தமிட்டார். இது பற்றி கூரிய உள்ளூர் வாசிகள் இது 230 ஆண்டு பழமையான சடங்காகும். இதனால், மழை பெய்து பயிர்கள் செழிப்புடன் வளரும், அமைதி மற்றும் நல்லிணக்கம் ஏற்படும் என்று ஐதீகம். மேலும் இது அதிர்ஷ்டத்த்தை தரும் என்றும் நம்பப்படுகிறது என்று கூறினார். அதாவது திருமணம் நடைபெறுவதற்கு முன்பு, முதலைக்கு ஆடைகள் அணிவிக்கப்படும். அத்துடன் பாதுகாப்புக்காக அதன் வாய் கட்டப்பட்டு இத்தகைய சடங்கு நடைபெறும் என்று கூறினர்.