மெக்கின்ஸி நிறுவனத்தில் 2000 பேர் பணி நீக்கம்

February 22, 2023

உலக அளவில் பிரபலமான கன்சல்டிங் நிறுவனமான மெக்கின்ஸி, 2000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 28000 இருந்து 45000 ஆக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மெக்கின்ஸி நிறுவனம் 100 வருடங்கள் பாரம்பரியம் கொண்டதாகும். சிக்காகோவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது உலகின் 130 நாடுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. “ஊழியர் […]

உலக அளவில் பிரபலமான கன்சல்டிங் நிறுவனமான மெக்கின்ஸி, 2000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 28000 இருந்து 45000 ஆக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மெக்கின்ஸி நிறுவனம் 100 வருடங்கள் பாரம்பரியம் கொண்டதாகும். சிக்காகோவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது உலகின் 130 நாடுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. “ஊழியர் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கடந்த சில ஆண்டுகள் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் வழங்குவதில் கவனம் செலுத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்களுக்கான ஆதரவு வழங்கலை மையப்படுத்தி நிறுவனம் பயணிக்க உள்ளது. அத்துடன், செலவுகளைக் குறைக்கவும் இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu