பனிக்காலத்தில் ரயில்களை பாதுகாப்பாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மழைக்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கி நீடித்துவருகிறது. தமிழகத்திலும் காலை நேரத்தில் பனிப்பொழிவு காணப்படுகிறது. எனவே, ரயில்களை பாதுகாப்பாக இயக்கும் விதமாக, பல்வேறு ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ரயில் இயக்கத்தில் பயணிகள் பாதுகாப்பு முக்கியமானதாக இருக்கிறது. எனவே, பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் போது, ரயில்களை பாதுகாப்பாக இயக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ரயில் இன்ஜின்களின் முகப்பு பகுதியில் எல்.இ.டி. பல்புகள் பொருத்துவது, பனி மூட்டத்தை நீக்கும் வகையில் கருவிகளைப் பொருத்துவது, மணிக்கு 60 முதல் 75 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதைப் பின்பற்றவும், ரயில் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்று அவர்கள் கூறினர்.