முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறந்த காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா நடந்தது. இதில், சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு முதன்மைச் செயல்வீரர்களாக செயல்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.முதலமைச்சர் உரையாற்றும்போது, "இந்த நிகழ்ச்சி எனக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. பதக்கங்களை வென்ற காவலர்களுக்கு வாழ்த்துகள் கூறினார். மேலும், "மகப்பேறு விடுப்புக்குப் பின் பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு விரும்பிய இடங்களில் பணி வழங்கப்படும். காவல்துறையை நவீனமையாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முக்கிய பங்கு உண்டு" என்றார்.