அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் மருத்துவ சீட்டு எடுத்து, சேராமல் விட்டால் மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை விதிக்கப்படும் என மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான கலந்தாய்வு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கடைசி ரவுண்டில் மருத்துவ சீட்டு எடுத்து அதில் சேராவிட்டால் நீட் தேர்வை ஓராண்டு எழுத முடியாமல் தடை விதிக்கப்படும் என மருத்துவ கவுன்சில் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே இதில் முன் பணத்தொகை திருப்பித் தரப்பட மாட்டாது என்பது நடைமுறையில் உள்ளது.