தமிழ் மொழியில் மருத்துவ படிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

October 31, 2022

தமிழ் வழியில் மருத்துவ படிப்பை படிப்பதற்காக விரைவில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 32 லட்சம் மதிப்பில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கி, பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டு தமிழ் வழியில் மருத்துவ கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. முதலில் மருத்துவக் கல்லூரி இல்லாத […]

தமிழ் வழியில் மருத்துவ படிப்பை படிப்பதற்காக விரைவில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 32 லட்சம் மதிப்பில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கி, பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டு தமிழ் வழியில் மருத்துவ கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

முதலில் மருத்துவக் கல்லூரி இல்லாத இடங்களில் மருத்துவ கல்லூரி தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது.

இந்த ஆறு மருத்துவ கல்லூரிகளும் வந்த பிறகு, சென்னையில் தமிழ் வழியில் மருத்துவ படிப்பை படிப்பதற்காக விரைவில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்படும். மூன்று மருத்துவ பேராசிரியர்கள் கொண்ட குழு மருத்துவ பாடப் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வருகின்றனர். முதலாண்டு மருத்துவக் கல்லூரி பாடப் புத்தகங்கள் தற்போது மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. புத்தகம் மொழிபெயர்த்தப்பட்ட பிறகு மொழி பெயர்ப்பு வல்லுனர்களிடம் கொடுத்து சரி பார்க்கப்படும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu