மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் மூத்த குடிமக்களுக்கு மருத்துவம், சட்ட ஆலோசனை முகாம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் மூத்த குடிமக்களுக்காக ஆண்டுக்கு 2 முறை மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாமை நடத்துகிறது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் 28-ந்தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை கிண்டி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் இதில் சட்ட வல்லுனர்களை கொண்டு சட்ட ஆலோசனையும் நடத்தப்படும். இதில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் 9361086551, 8124878192, 9659671245 ஆகிய செல்போன் எண்களில் எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் மூத்த குடிமக்கள் மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனைகளை பெற்று பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.