7-அடுக்கு பாதுகாப்பு முறையுடன் மீனம்பாக்கம் விமான நிலையம்

January 25, 2025

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குடியரசு தின விழாவுக்கான 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குடியரசு தின விழாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் கடந்த 20-ந்தேதி முதல் 5 அடுக்காக அமல்படுத்தப்பட்டன. தற்போது, 7 அடுக்கு பாதுகாப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு போலீஸ் அதிரடிப்படை, தேசிய பாதுகாப்பு படை, விமான பாதுகாப்பு படை, உளவுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த […]

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குடியரசு தின விழாவுக்கான 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குடியரசு தின விழாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் கடந்த 20-ந்தேதி முதல் 5 அடுக்காக அமல்படுத்தப்பட்டன. தற்போது, 7 அடுக்கு பாதுகாப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு போலீஸ் அதிரடிப்படை, தேசிய பாதுகாப்பு படை, விமான பாதுகாப்பு படை, உளவுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நள்ளிரவில், விமான நிலையத்தில் பயங்கரவாத ஒத்திகை நிகழ்ந்தது, அதில் பயங்கரவாதி ஒருவர் நாச வேலையில் ஈடுபடுவது போல கற்பனை செய்து, அவரை சுற்றி வளைத்து பிடிக்கும் பயிற்சி நடந்தது. 7 அடுக்கு பாதுகாப்பு முறை நாளை (26-ந்தேதி) நள்ளிரவு வரை செயல்படும் என்றும், 30-ந்தேதி வரை 5 அடுக்கு பாதுகாப்பு அமலிலிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu