இந்தியாவைச் சேர்ந்த முன்னணி இணைய வர்த்தக நிறுவனம் மீஷோ ஆகும். கடந்த 5 ஆண்டுகளாக, மீஷோ நிறுவனத்தின் உயர் பதவியில் உத்கிருஷ்ட குமார் இருந்து வந்தார். தற்போது, சொந்தமாக புதிய நிறுவனம் தொடங்குவதற்காக, மீஷோ நிறுவனத்தில் இருந்து அவர் வெளியேறுகிறார். இந்த தகவலை மீஷோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விதித் ஆத்ரேயா தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக, மீஷோ நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில், நிறுவன செயல்பாடுகளை உத்கிருஷ்ட குமார் கவனித்து வந்தார். அவரது கண்காணிப்பில் பல்வேறு துறைகள் இயங்கி வந்தன. மீஷோவுக்கு முன்னதாக அவர் பேடிஎம் மால் நிறுவனத்தின் உதவி துணைவேந்தராக இருந்து வந்தார். இவ்வாறு, தனது நிறுவன அனுபவங்களை கொண்டு, அவர் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பதவியில் மேகா அகர்வால் நியமிக்கப்பட உள்ளதாக மீஷோ நிறுவனம் தெரிவித்துள்ளது.