இந்தியாவின் சந்திரயான் 3 திட்டத்திற்கு நேரடி போட்டியாக ரஷ்ய நாட்டின் லூனா 25 நிலவு திட்டம் அமைந்துள்ளது. இதுவும் நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்வதற்காக செலுத்தப்பட உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை, லூனா 25 கலத்தை ரோஸ்காஸ்மோஸ் விண்ணில் செலுத்துகிறது.
இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம், ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், லூனா 25 வரும் வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டு, 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைகிறது. அதைத் தொடர்ந்து, 5 முதல் 7 நாட்களுக்குள் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சந்திரயான் 3 தரையிறக்கத்திற்கு சற்று ஏறக்குறைய ஒரே நேரத்தில் லூனா 25 நிலவில் தரையிறங்க உள்ளது. மேலும், இது இந்தியாவின் சந்திரயான் 3 பாதையை எந்த வகையிலும் பாதிக்காது என ரோஸ்காஸ்மோஸ் உறுதி அளித்துள்ளது.