இந்தியாவில் தமிழகம் உட்பட ஏழு மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் ஜவுளித் துறையை வலுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு கட்டமைப்பு வசதிகளை செய்து வருகிறது. இந்த வகையில், இந்தியாவில் ஏழு மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும். இந்தத் துறைக்கான அதிநவீன உள்கட்டமைப்பை வழங்கும். இந்த பூங்காக்கள் கோடிக்கணக்கான முதலீட்டை ஈர்ப்பதுடன் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.