ஆண்களின் பாலினத்தை தீர்மானிக்கும் Y குரோமோசோம் சுருங்கி வருவதாகவும், இறுதியில் அது அழிந்துவிடலாம் என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதன் விளைவாக, எதிர்காலத்தில் பெண்கள் மட்டுமே பிறக்கும் நிலை உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், புதிய பாலின தீர்மானிக்கும் மரபணுக்கள் உருவாகலாம் அல்லது வேறு இனப்பெருக்க முறைகள் உருவாகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இது பற்றி தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். இந்த மாற்றம், மனித இனப்பெருக்கம் மற்றும் இனங்களின் நிலைத்தன்மையை பெரிதும் பாதிக்கும். உதாரணமாக, முள்ளம்பன்றி எலி ஒரு புதிய ஆண் தீர்மானிக்கும் மரபணுவை உருவாக்கியுள்ளது. இது போன்ற மாற்றம் மனிதர்களிலும் நிகழலாம் என்று ஊகிக்கப்படுகிறது. காலப்போக்கில், வெவ்வேறு பாலின தீர்மானிக்கும் முறைகள் புதிய மனித இனங்களின் தோற்றத்திற்கு கூட வழிவகுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.