பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா, புதிய சுற்றில், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நிர்வாகிகள் மற்றும் துணை வேந்தர்களுக்கு, பணி நீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களை கண்டறியுமாறு சொல்லப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த பணி நீக்க அறிவிப்பு ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் ஆயிரக்கணக்கான மெட்டா ஊழியர்களுக்கு, குறைந்த செயல்திறன் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பணி நீக்கம் முடிவாகலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே, கடந்த நவம்பர் மாதத்தில் 11000 பேர் நீக்கப்பட்ட நிலையில், இந்த தகவலால் மெட்டா ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.














