கடந்த சனிக்கிழமை இரவு, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டு மக்கள் வினோதமான விண்கல் நிகழ்வைக் கண்டு களித்தனர். அன்றைய இரவு வானம் நீல வண்ணத்தில் விண்கற்களால் ஒளிர்ந்தது.
வானில் இருந்து விண்கற்கள் பூமியில் விழும் பொழுது எரி நட்சத்திரங்களாக காட்சியளிக்கும். அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு. ஆனால், கடந்த சனிக்கிழமை அன்று நீல நிற ஒளியோடு விண்கல் விழுந்துள்ளது. காஸ்ட்ரோ டயர் நகர் பகுதியில் இந்த விண்கல் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விண்கல் நிகழ்வை வியப்புடன் கண்ட மக்கள், அதனை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.