மெட்ரோ ரயில் ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்

April 30, 2024

மெட்ரோ ரயில் நிறுவனம் ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டை நிறுத்தியுள்ளது. சென்னையில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையில் ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் டோக்கன் முறையும் இருந்தது. இந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தை 38 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டை மெட்ரோ ரயில் நிர்வாகம் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இனிமேல் ஸ்மார்ட் பயண அட்டை பயணிகளுக்கு வழங்கப்படாது. ஏற்கனவே கார்டு வைத்திருப்பவர்கள் ரீச்சார்ஜ் செய்து பயன்படுத்தி […]

மெட்ரோ ரயில் நிறுவனம் ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டை நிறுத்தியுள்ளது.

சென்னையில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையில் ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் டோக்கன் முறையும் இருந்தது. இந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தை 38 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டை மெட்ரோ ரயில் நிர்வாகம் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இனிமேல் ஸ்மார்ட் பயண அட்டை பயணிகளுக்கு வழங்கப்படாது. ஏற்கனவே கார்டு வைத்திருப்பவர்கள்
ரீச்சார்ஜ் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காட்டாந்த ஆண்டு நவம்பர் முதல் ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது. ஏப்ரல் மாதத்தில் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு வழங்கப்பட்டு வருகிறது. புது பயன்பாடு உள்ள அந்த கார்டை ஊக்குவிப்பதற்காக ஸ்மார்ட் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க இந்த கார்டை பயன்படுத்தலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu