பொங்கலை முன்னிட்டு 13, 14 தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசித்துவரும் வெளியூரை சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மும்முரம் காட்டி வருகின்றனர். மேலும், நாளை முதல் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள் என்பதால், அவர்களின் பயண வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரவு 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்றும், கடைசி சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.