சென்னையில் நாளை அதிகாலை 3 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை

January 5, 2024

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நாளை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு விழிப்புணர்வுகளை வலியுறுத்தி அவ்வப்போது மாரத்தான் ஓட்டம் நடைபெற்று வரும். அவ்வகையில் நாளை மாரத்தான் ஓட்டம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் சேவைகள் நாளை அதிகாலை 3:00 மணி முதல் இயக்கப்பட உள்ளன. இதனை ஒட்டி மாரத்தான் பங்கேற்பாளர்களுக்கு பயனுள்ள வகையில் […]

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நாளை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

சென்னையில் பல்வேறு விழிப்புணர்வுகளை வலியுறுத்தி அவ்வப்போது மாரத்தான் ஓட்டம் நடைபெற்று வரும். அவ்வகையில் நாளை மாரத்தான் ஓட்டம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் சேவைகள் நாளை அதிகாலை 3:00 மணி முதல் இயக்கப்பட உள்ளன. இதனை ஒட்டி மாரத்தான் பங்கேற்பாளர்களுக்கு பயனுள்ள வகையில் மற்றும் அவர்கள் இடையூறு இன்றி எளிய பயணத்தை அனுபவிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிறுவனம் 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து நிறுவனத்தின் சிறப்பு கியூஆர் கோடு பதியப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி நாளை மட்டும் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம். மேலும் பங்கேற்பாளர்கள் அன்று மட்டும் வாகன நிறுத்தத்தில் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் எனும் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu