தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சத்து 15 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், கபினி மற்றும் கே.ஆர். எஸ் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் 2 லட்சத்து 15 கன அடி நீர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நீர் வெளியீட்டின் காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளிபாளையம் ஆற்றோரம் உள்ள சுமார் 130 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறுவும், அரசின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறுவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.